தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் பொள்ளாச்சி தொகுதியில் நூர் முகமது என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளத நிலையில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் 43 முறை நூர் முகமது சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.