கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்த கரும்புகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தனசேகர்(53) என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கரும்பு கட்டுகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஒரு கரும்புக்கட்டு தனசேகர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த தனசேகரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தனசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் தனசேகரின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.