கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துக்கோட்டை பீட் வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.