திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென திருப்பதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் திருப்பதியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலயுறுத்தி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடன் சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் மூலம் மனு அளித்துள்ளனர். உயிரிழந்த திருப்பதிக்கு யோகேஷ் என்ற மகனும், மோகனா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.