திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்நிலையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களுக்கு போலீசார் துண்டு பிரசுரம் மற்றும் இனிப்புகள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சாலை விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.