தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் பாரதிராஜாவை தட்டி கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பாரதிராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.