சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(22) என்பவரும் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வைத்தியகவுண்டன்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கொட்டவாடி பிரிவு சாலை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாத் மற்றும் யுவராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.