புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பொன்மணிகண்டன்(40) மலேசியாவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மலேசியாவை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் மகேஸ்வரியிடமிருந்து 40 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன் மகேஸ்வரியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி மணிகண்டனின் வீட்டிற்கு வந்து திருமணம் குறித்தும், தான் கொடுத்த பணம் பற்றியும் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மணிகண்டன், அவரது தந்தை வாசு, தாயி ரஜினி, அண்ணன் ரஞ்சித் குமார், சகோதரி பிரியா ஆகியோர் இணைந்து மகேஸ்வரியை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து மகேஸ்வரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மணிகண்டன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.