திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் இருந்து மோட்டார் சைக்கிளை சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரெண்டலப்பாறை பிரிவு அருகே சென்ற போது திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துப்பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.