திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கென்னடி கடந்த 1- ஆம் தேதி விஷம் குடித்து தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கி கிடந்த கென்னடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.