ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களம் இறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்ற நிலையில், லக்னோவுக்கு எதிரான போட்டியில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் சிஎஸ்கே அணியால் பந்து வீச முடியவில்லை. மேலும் இதன் காரணமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.