ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. இந்த போட்டியின் இறுதிக்கட்டத்தில் களம் இறங்கிய சென்னை அணியின் எம்.எஸ் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு பேசிய லக்னோ அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோயினிஸ் கடைசி நேரத்தில் ரன்கள் விளாசி அற்புதமாக பினிஷிங் செய்த எம்.எஸ். தோனிக்கு தலை வணங்குவதாக கூறினார். மேலும் இன்னும் சில நாட்களில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை சந்திக்க ஆர்வமாக இருக்கிறோம் என்றும் கூறினார்.