சேலம் மாவட்டத்தில் உள்ள துளசி மணியூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுப்பிரமணி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சேலம் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.