ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நார்த்தங்கோட்டை கிராமத்தில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கண்ணப்பன் என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பாரில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தது தொடர்பான விவகாரத்தில் ரகுபதி வேலையை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அருகம்பாளையத்தில் இருக்கும் வேறு ஒரு பாரில் ரகுபதி பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ரகுபதிக்கும் கண்ணப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கண்ணப்பன் ரகுபதியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்ணப்பனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.