தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் பகுதியில் விவசாயியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த ஒருவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கினை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் ஐயப்பனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.