சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இந்நிலையில் கோவில் அறநிலைத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலா 4 சவரன் எடையுள்ள 2 தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அலுவலர்கள் கேட்டபோது 4 சவரன் எடையுள்ள ஒரு கொலுசை மட்டும் வில்வமூர்த்தி திரும்ப கொடுத்துள்ளார். மற்றொரு கொலுசை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மடப்புரம் கோவில் அறநிலைத்துறை அலுவலர்கள் சிவகங்கை இணை ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மானாமதுரை அறநிலையத்துறை ஆய்வாளர் அய்யனார் நேற்று திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வில்வமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.