ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடாணையில் மொத்த விற்பனை பண்டக சாலை மேலாளராக ஜெயச்சந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ரேஷன் கடை விற்பனையாளரிடம் மாதம்தோறும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு ரேஷன் கடை பணியாளரான சுந்தர்ராஜனிடம் ஜெயச்சந்திரன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயச்சந்திரனை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.