தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திட்டை கீழ தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மகேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனைவி இரண்டு மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மகேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து உத்திரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.