தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார் சைக்கிளில் பி.டி.ஆர் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தந்தை, மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.