விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கேஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.