விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் கோழி கடை அமைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு சேகர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் சேகருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.