விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.