திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பேச்சிமுத்து தனது நண்பருடன் பாளையங்கோட்டையில் இருக்கும் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து 2 மில்க் வித் ஐஸ் கிரீமை பேச்சிமுத்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஊழியர் வேறு ஒரு ஐஸ் கிரீமை மாற்றி கொடுத்ததால் பேச்சிமுத்து வேறு வழியில்லாமல் அதனை சாப்பிட்டார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் பேச்சிமுத்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் மனு தாக்கல் செய்தார் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி சம்பந்தப்பட்ட ஹோட்டல் பேச்சிமுத்துவுக்கு 5 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.