விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பைத்தாம்பட்டி சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ராமச்சந்திரனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராமச்சந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.