தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான ராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார், கேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சித் குமாரும், கேசவனும் ராஜுக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொட்டியுள்ளனர். இதனை ராஜ், அவரது மனைவி, மகள் ஆகியோர் தட்டி கேட்டனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் குமாரும், கேசவனும் ராஜ் உள்ளிட்ட மூன்று பேரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ரஞ்சித் குமார் மற்றும் கேசவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.