திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் குணா(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு குணா 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குணாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் குணாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.