திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து மின்வேலி மீது விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

அதனை தொட்டதால் எதிர்பாராதவிதமாக லோகநாதன் மின்சாரம் தக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லோகநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.