மதுரை மாவட்டத்திலுள்ள அயன் மேட்டுப்பட்டியில் செல்வம்- வான் அழகி தம்பதியினர் வசித்து வந்தனர்.  இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செல்வத்தின் மகளுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பெண் காதலனுடன் சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.