கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.