கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாடுவிளை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் மாதேஸ்வரன் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் மாரியப்பனால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியப்பனும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.