தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் கடந்த வாரம் ஒற்றை விளக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு நேற்று 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் ஐந்து, திருவாரூர் ஒன்பது, திருவள்ளூர் 2, கோவை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் சற்று பீதி அடைந்துள்ளனர்.