கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதல் பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரும்,  நிதியமைச்சர்மான சித்தாராமையா தற்போது தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு மிக முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பாக மேகதாது அணையை தொடர்பான விஷயங்களை பட்ஜெட்டில் மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

விரைவில் மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தற்போது இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு தொடர்பான அம்சங்கள் ஏற்கனவே மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அணை கட்டுவதற்கு அனுமதி பெற தேவையான நடவடிக்கைகள் என்பது எடுக்கப்படும் என்றும் தற்போது பட்ஜெட்டின் கர்நாடகா அரசு அறிவித்திருக்கிறது.