கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே ஷாலினிக்கு பிரசவ வலி அதிகமானது.

இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். இதனையடுத்து மருத்துவ உதவியாளர் வினோதினி ஆம்புலன்சிலேயே ஷாலினிக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.