கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நத்தக்காயம் பகுதியில் வனிதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான ரங்கன் என்பவருக்கும் நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.