கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரிமரம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நிஷாந்த் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான சிறுமி ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனையடுத்து டாக்டர்கள் சிறுமியின் ஆதார் கார்டை ஆய்வு செய்த போது அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் நிஷாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.