கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நமச்சிவாயபுரம் கிராமத்தில் ஜவுளி கடை உரிமையாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசிநிதா(45) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணி வரை சுசிநிதா பள்ளிக்கு புறப்படாமல் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சுசிநிதாவை கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றனர்.

இதனையடுத்து இரவு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் வாந்தி எடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது தான் விஷம் குடித்துவிட்டதாக சிறுமி தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசிநிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.