பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி மக்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து தலைவராக இருந்து வரும் ராஜேஸ்வரி பிரியா,  லியோ பாடல் வரிகள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் அவரை ஆபாசமாக பேசியதாகவும்,  பேசிய அனைவரும் நடிகர் விஜய்க்கு ட்விட்டரில் டேக் செய்ததாகவும் கூறி விஜய் மீதும்,  அவரது ரசிகர் மீதும் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளிடம் பேசிய அவரிடம் நடிகர் விஜய் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே…  மற்ற எந்த நடிகரும் இதுபோல நடித்தது இல்லையா ? விஜய் மட்டும் டார்கெட் செய்கிறீர்களா ? என்று கேள்வி எழுப்பினர் அப்போது பதில் அளித்த அவர்,  எனக்கு அவசியம் கிடையாது. நான் எலக்சன்ல நின்னு இருக்கேன். 21 பேர நிக்க வச்சிருக்கேன். என் வரலாறு தெரியுமா உங்களுக்கு ? ஹலோ… சார்.,  வரலாறு தெரியுமா ? தெரிஞ்சிட்டு வந்து கேள்வி கேளுங்க என ஆவேசமாக பேசினார்.

என்னோட வரலாறு இங்கே யாருக்காச்சும் தெரியுமா ? நான் எந்த கட்சில இருந்தேன் ? என்ன பொறுப்புல இருந்த ?  நான் மக்களுக்காக இருந்திருக்கனா இல்லையா ? நடிகர் விஜய் அவருக்கு தெரிந்தே ஒரு பெண்ணை அவருடைய ரசிகர்கள் ஆபாசமாக எழுதினால் கூட அத பாத்துக்கிட்டு இருக்காரா ?  தூண்டிவிடுறாரான்னு எனக்கு தெரியல?  அப்ப அவர்தான் பணம் கொடுத்து இந்த  வேலைய பாக்குறாரு.. அதனால அவரை கைது செய்யணும்.

விஜய் தான் தூண்டிவிடுறாரு என சொல்லுறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு ? என்ற கேள்விக்கு, ட்விட்டர்ல டேக் பண்றாங்கன்னு சொல்றேன்ல…

நான் விஜய் பத்தி கம்ப்ளைன்ட் கொடுத்தத பத்தி கேட்டா நான் விலா வரியா சொல்ல தயாரா இருக்கேன். இத்தல போயிட்டு, நடிகர் சந்தானம் பண்ணலையா ?  சண்முகம் பண்ணலையா ? சுந்தரம் பண்ணலையானா ?

ட்விட்டர் பக்கத்துல ஆக்டர் விஜய் -ன்னு  ஒரு பக்கம் இருக்கு. அதுல 4:30 மில்லியன் பேர் இருக்காங்க. அந்த பேஜ்ல கீழே அதிகாரபூர்வமாக விஜயால்  மெயின்டைன் பண்ணக்கூடிய பக்கம்னு குறிப்பிடப்பட்டிருக்கு… அப்படி இருக்கும்போது, ஆபாச பதிவுகள் அனைத்துமே ஆக்டர் விஜய் என்ற பக்கத்தை மென்ஷன் பண்ணி தான் போடுறாங்க.

எனக்கு தெரிஞ்சிச்சினா….  சமூக பொறுப்பு இருந்துச்சுன்னா… ஒரு பெண்ணை ஆபாசபடுத்துறத  தடுப்பேங்க, பாத்து ரசிப்பாங்களா ? விஜய் செலிபிரிட்டியா இருக்கட்டும், சமூகத்துல எல்லாரும் சமம் தாங்க.  சட்டத்துக்கு முன்னாடி எல்லாரும் சமம்தான். நடிகர் விஜய்யா இருந்தாலும்,  நானா இருந்தாலும் சமம்தான் என விளாசினார்.