நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் அங்கூர் வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் ப்ரீ கேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கான கையெழுத்து போட்டி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, உச்சரிப்பு போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மௌஸ்மி மலிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதை நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.