நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த ராஜ், ராமச்சந்திரன், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ் உள்பட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.