திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை இபி காலனியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு முறை கொண்ட சிறுமி தங்கியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கந்தசாமி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கந்தசாமியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.