திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த 2 வாலிபர்களும் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை நோக்கி கற்களை வீசி உடைத்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேருந்தின் கண்ணாடியை உடைத்த தினேஷ்குமார், அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.