சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லடி திடல் கிராமத்தில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பழனிச்செல்வம் செல்போன் பேசி கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே இருக்கும் மின் வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது  சாய்ந்து நின்றார்.

அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பழனிசெல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பழனிசெல்வம்  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.