திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி பகுதியில் சரவணன்-சுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவேதா(22), எஸ்திகா(20) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் இருக்கும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கையைப் போல நானும் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வு எழுத வேண்டும் என சுவேதா ஆசைப்பட்டார்.

ஆனால் பெற்றோர் சரியான பதில் கூறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுவேதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவேதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.