அர்ச்சனை மாவட்டத்தில் உள்ள ஏழுக்கிணறு தையப்ப முதல் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கங்காதரன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்களும், ஆசிரியர்களும் கங்காதரனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கங்காதரனுக்கு வலிப்பு நோய் இருந்தது தெரியவந்தது. திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த கங்காதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.