சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் மூவடி புஜ்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற தோழி உள்ளார். இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் மூவடி பூஜ்ஜியும், மேரியும் வேலைக்கு செல்வதற்காக நெற்குன்றம் அருகே சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் கீழே விழுந்தனர்.

இதனையடுத்து பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி மூவடி பூஜ்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மேரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.