திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆட்டோ இந்திரா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் தனியார் டியூஷன் சென்டரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(10) என்ற மகளும் கோதர்ஷன்(6) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று மாலை தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் பிரேமலதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பிரேமலதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனது மகளையும், மகனையும் அக்காவிடம் ஒப்படைத்து விடுங்கள். எனது கணவர் நல்லவர். அவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள். உறவினர்கள் அனைவரும் எனது கணவர், மகள், மகனை நல்ல முறையில் கவனித்து கொள்ளுங்கள் என எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.