திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றார். அவர் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அவர் ஏதோ புகார் மனு கொடுக்க வந்திருப்பதாக நினைத்து போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது மதுபோதையில் இருந்த அந்த நபர் எனது மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆகவில்லை.

காவல்துறை உங்கள் நண்பன் என கூறுகிறீர்கள். எனக்கு உதவி செய்யுங்கள். எனது மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து தாருங்கள் என கூறி ரகளை செய்துள்ளார். அவரை போலீசார் அங்கிருந்து அனுப்ப முயற்சி செய்தனர். ஆனாலும் அவர் போதையில் உளறியபடி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டே அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.