தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹேமலதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹேமலதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஹேமலதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.