கடலூர் மாவட்டத்தில் உள்ள பேய்க்கா நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் கண்விழித்த ஜெயராமன் தனது மகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தமிழ்ச்செல்வியை பல்வேறு இடங்களில் ஜெயராமனும், குடும்பத்தினரும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ஜெயராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழ் செல்வியை தேடி வருகின்றனர்.