செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மாணவியின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்று நடத்தப்பட்ட விசாரணையில் முதல் நாள் சிக்கன் ப்ரை சாப்பிட்டுவிட்டு மீதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்டதால் உணவில் விஷம் ஏறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.